×

போலீசாரிடம் இருந்து தப்பிக்க கழுத்தை அறுத்துக்கொண்ட பிரபல கஞ்சா வியாபாரி

அம்பத்தூர்: கொரட்டுர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவர் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 20கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்ற வழக்கில் பலமுறை இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சிலம்பரசன் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அவரது தலைமையில் போலீசார், சிலம்பரசன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் அரை கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், சிலம்பரசனை பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வர மறுத்து ரகளையில் ஈடுபட்ட சிலம்பரசன், யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் கிடந்த பிளேடை எடுத்து, போலீசார் கண்முன்னே தனக்கு தானே கழுத்தில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிலம்பரசனிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. …

The post போலீசாரிடம் இருந்து தப்பிக்க கழுத்தை அறுத்துக்கொண்ட பிரபல கஞ்சா வியாபாரி appeared first on Dinakaran.

Tags : Silambarasan ,Bodhiamman Koil Street, Korattur ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...