×

நன்நடத்தை விதிமீறிய 3 ரவுடிகளுக்கு 330 நாள் சிறை

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் (21), இவர் மீது 12க்கும்  மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புதுவண்ணாரப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த ரவுடி திலீப் (28). இவர் மீது கொலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தண்டையார்பேட்டை குமரன் நகர் 3வது தெருவை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (24). இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் மூவரும் திருந்தி வாழப்போவதாக கூறி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தனர். ஆனால் அதை மீறி வழிப்பறி, கஞ்சா விற்பனை ஆகிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் போலீசார் மூவரையும் கைது செய்தனர். நன்னடத்தை விதிமீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டியிடம் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், சிலம்பரசனுக்கு 287 நாள் சிறை தண்டனையும், தீனாவிற்கு 213 நாள் சிறை தண்டனையும், விக்னேசுக்கு 330 நாள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது….

The post நன்நடத்தை விதிமீறிய 3 ரவுடிகளுக்கு 330 நாள் சிறை appeared first on Dinakaran.

Tags : Kandadarpet ,Rudi Silambarasan ,Thiruvotteur Starved Temple Street ,
× RELATED சென்னையில் குறும்படம் எடுப்பதாக...