மும்பை: இந்தியாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர், இந்தியில் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் மலர்ந்தது. தொடர்ந்து 6 வருடங்கள் காதலித்த அவர்கள், கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா படுகோன் கர்ப்பம் அடைந்தார். இத்தகவலை அவர் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபிகா படுகோன் சமீபத்தில் வெளியிட்டிருந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், மும்பையிலுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து ரசிகர்களும், திரையுலகினரும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The post தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.