×

தமிழில் தொடர்ந்து நடிப்பேன்: நானி ஆர்வம்

சென்னை: தெலுங்கு நடிகர் நானி, தமிழில் ‘வெப்பம்’, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ஆஹா கல்யாணம்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நஸ்ரியா ஜோடியாக அவர் நடித்துள்ள ‘அன்டே சுந்தரானிகி’ என்ற படம், தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து நானி கூறியதாவது:‘ஷ்யாம் சிங்கா ராய்’ போன்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற காதலும், காமெடியும் கலந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தின் கதை தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளைக் கடந்து, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு முன்பு நான் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், சரளமாக தமிழில் பேச முடியவில்லை. ஏதாவது தப்பாகப் பேசிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. தமிழில் தெளிவாகப் பேச கற்றுக்கொண்டு, தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நஸ்ரியா கூறுகையில், ‘எனக்கும் தமிழில் பேசுவது என்றாலே ரொம்ப பயமாக இருக்கிறது. தற்போது தமிழ் கற்று வருகிறேன்’ என்றார்….

The post தமிழில் தொடர்ந்து நடிப்பேன்: நானி ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Nani Kiyaru ,Chennai ,Nani ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்