- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- பொருநை அருங்காட்சியகம்
- சென்னை
- நெல்லை மாவட்டம்
- செயலகம்
- பொதுப்பணித் துறை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற
- போருணை
- அருங்காட்சியகம்
- வீரம் வில்னா நெல்லை…
- தின மலர்

சென்னை: நெல்லை மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்றப்பேரவை விதி 110-இன்கீழ், முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். “வீரம் விளைந்த நெல்லை நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்“ என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலமாக கிடைத்தப் அரியப் பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் 106 முதுமக்கள் தாழிகள் அகழாய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.33 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டுள்ளது. பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஓர் கட்டடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டது.
பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா முதன்மைத் தலைமைப் பொறியாளர் ச.மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு appeared first on Dinakaran.
