- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
- இந்தியா
- பிசிசிஐ
- லண்டன்
- தென் ஆப்பிரிக்கா
- ஆஸ்திரேலியா
- பிரபுக்கள்
- ஐரோப்பிய மத்திய வங்கி...
- தின மலர்
லண்டன்: நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 முதல் 2025 வரை நடந்து அதன் இறுதிப் போட்டி, வரும் ஜூன் மாதம் லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை இசிபி எனப்படும் இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு இறுதிப் போட்டிகளையும், இசிபியே நடத்தியது. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நம் நாட்டின் ஜெய்ஷா பொறுப்பு வகிக்கும் நிலையில், 2025-2027 சீசனுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டியை இங்கிலாந்துக்கு வெளியே, இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விருப்பம் தெரிவித்து அதற்கான நகர்வுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் கமிட்டி கூட்டம், கடந்த மாதம் ஜிம்பாப்வேயில் நடந்தது. அப்போது, 2027ல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் முறைப்படி விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு, அந்த போட்டியில் இந்திய அணி இடம்பெறாமல் போகும் சூழல் ஏற்பட்டால் டிக்கெட் விற்பனை எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தை கிரிக்கெட் நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். மேலும், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால், அந்த போட்டியை இந்தியாவில் எப்படி நடத்துவது என்பது குறித்தும் சில நிர்வாகிகள் ஐயம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2027ல் இறுதிப் போட்டி இந்தியாவில் நடக்குமா? உரிமையை பெற பிசிசிஐ தீவிரம் appeared first on Dinakaran.
