×

உபி அரசு கட்டிடங்களில் பசு சாணத்தை பூசுங்கள்: முதல்வர் யோகி உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அரசு கட்டிடங்களில் பசு சாண அடிப்படையிலான வண்ணப்பூச்சைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையில் நவீன தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புதுமைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசு கட்டிடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வண்ணப்பூச்சு பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த உத்தரவுக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து ள்ளார்.

 

The post உபி அரசு கட்டிடங்களில் பசு சாணத்தை பூசுங்கள்: முதல்வர் யோகி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UP government ,CM ,Yogi ,Lucknow ,Chief Minister ,Yogi Adityanath ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் பாதுகாப்புப்...