×

ராஞ்சியில் விமானப்படையின் சாகச கண்காட்சி


ராஞ்சி: இந்திய விமானப்படையில் கடந்த 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழு விமானப்படையில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கவும், ஆயுதப்படைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வான் சாகச கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இக்குழு நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நம்கும் ராணுவ மைதானத்தில் வான் சாகச நிகழ்ச்சி நடத்தியது.

இதில், 6 விமானங்கள் வானில் மிக நெருக்கமாக பறந்து சாகசம் செய்தன. விமானப்படை தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி பாட்னாவில் இக்கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post ராஞ்சியில் விமானப்படையின் சாகச கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Air Force ,Ranchi ,Surya Kiran Aerobatic Team ,Indian Air Force ,Ranchi, Jharkhand ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...