×

அலங்கரித்த புஷ்பரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம்

சத்தியமங்கலம்: அலங்கரித்த புஷ்பரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் பண்ணாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

கோயில் முன்பிருந்து மேளதாளங்கள் முழங்க துணை ஆணையர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், அமுதா, பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் மாடுகள் பூட்டிய வண்டியில் புஷ்பரத ஊர்வலம் பவானிசாகர் சாலை மற்றும் சோதனை சாவடி வழியாக சத்தியமங்கலம்- மைசூர் சாலை கருணை இல்லம் வழியாக சென்று கோயிலை சுற்றி வந்து நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

The post அலங்கரித்த புஷ்பரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Pannari Amman ,Pushbarath ,Pannari Mariyamman Temple Kundam Festival ,Satyamangala, Erode district ,
× RELATED இருதய இடையீட்டு...