×

சட்ட பாடப்புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்படும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள் :

* அரசு சட்டக்கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு ஆசிரியர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வழங்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரிகளில் திறன் வகுப்பறை அமைக்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச பயிற்சிப்பட்டறை நடத்தப்படும்.
* தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் விடுதிகள் புனரமைக்கப்படும்.
* திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு தொகுப்பு நல்கை நிதி வழங்கப்படும்.
* திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் மாணவியர் விடுதி கட்டிடம் கட்டப்படும்.
* சட்டத்துறையில் மின் நூலகம் அமைக்கப்படும்.

The post சட்ட பாடப்புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்படும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Raghupathi ,Law Minister ,Raghupathi ,Tamil Nadu Legislative Assembly… ,Minister ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்