×

பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

 

கோபி, மார்ச் 26: கோபி அருகே உள்ள கொளப்பலூரில் பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோபி அருகே உள்ள கொளப்பலூர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பச்சியப்பன் மகன் சிவக்குமார் (49). இவர் கொளப்பலூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பிரிவில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயும், காது வலியும் இருந்து வந்த்தாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், நேற்று வீட்டில் இருந்த சிவக்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சிவக்குமாருக்கு சுமதி என்ற மனைவியும், வைசாலி என்ற மகளும் உள்ளனர்.

The post பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Town Panchayat ,Gopi ,Kolappalur ,Sivakumar ,Pacchiyappan ,Kamaraj Road, Kolappalur ,panchayat ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது