பொன்னேரி: மீஞ்சூர் பஜாரில் 1960ம் ஆண்டு இந்தியாவின் முதல் பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சிலை நிறுவப்பட்டது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நேரு சிலை அகற்றப்பட்டது. சாலை சீரமைப்பு பணி முடிந்ததும் அதே இடத்தில் நேரு சிலை வைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உறுதியளித்தது. ஆனால் இதுவரை சிலை வைக்கப்படவில்லை.
இந்நிலையில், மீஞ்சூர் பஜாரில் இருந்து அகற்றப்பட்ட நேரு சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்ப ஊடகத்துறை மாவட்ட தலைவர் முகமது தாரிக், திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட எம்பி சசிகாந்த் செந்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
The post நேரு சிலை அகற்றம் எம்பியிடம் காங்கிரசார் மனு appeared first on Dinakaran.
