×

புவனகிரி அருகே வாய்க்காலில் கிடந்த இளைஞர் மின் வேலியில் சிக்கி இறந்தது அம்பலம்

புவனகிரி, மார்ச் 6: புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்க்கால் ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாய்க்கால் தண்ணீரில் இறந்து கிடந்தார். அவரது காலில் வெட்டுக்காயங்கள் இருந்தன.இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய மருதூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், வாய்க்காலில் இறந்து கிடந்தவர் அருகில் உள்ள பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு(24) என்பதும், இவர் ஒரு தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றியதும் தெரிய வந்தது.

பாபு எதற்காக அந்த பகுதிக்கு வந்தார்? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாலிபர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த பாபு விவசாயி ஒருவர் தன் விளை நிலத்திற்காக அமைத்திருந்தத மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதற்கிடையே மருதூர் போலீசார் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்த பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனை கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த பாபுவுடன் வந்த அவரது நண்பர்கள் 3 பேர் மற்றும் நிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயி ஒருவர் என 4 பேரிடம் மருதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புவனகிரி அருகே வாய்க்காலில் கிடந்த இளைஞர் மின் வேலியில் சிக்கி இறந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri ,Ambalam ,Manjakollai ,Marudhur ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு