×

ஒரு நாள் வருவாய் மட்டும் ரூ.52 ஆயிரம் மகாகும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பம்: உபி முதல்வர் தகவல்

லக்னோ: மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் மட்டும் ரூ.30 கோடி சம்பாதித்ததாக உபி முதல்வர் யோகி தெரிவித்தார். உபி சட்டப்பேரவையில் மகாகும்பமேளாவால் மாநிலத்திற்கு வந்த வருவாய் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் 130 படகுகள் கொண்ட ஒரு குடும்பம் மட்டும் கடந்த 45 நாட்களில் மகாகும்பமேளாவால் ரூ.30 கோடி சம்பாதித்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மகாகும்பமேளாவில் படகோட்டிகள் சுரண்டப்பட்டதாக சமாஜ்வாடி குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஒரு படகோட்டி குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அவர்களிடம் 130 படகுகள் உள்ளன. 45 நாட்கள் நடந்த மகாகும்பமேளா மூலம் அவர்கள் 30 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு சராசரியாக ரூ. 23 லட்சம் வருவாய் வந்துள்ளது.

ஒவ்வொரு படகிலிருந்தும் ரூ. 50,000 முதல் ரூ.52,000 வரை வருவாய் கிடைத்துள்ளது. மகாகும்பமேளாவிற்கு அரசு ரூ.7,500 கோடி முதலீடு செய்தது. இதன் மூலம் ரூ.3.50 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது. ஓட்டல் துறையில் ரூ.40,000 கோடி, உணவு, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையில் ரூ.33,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, மத வழிபாடு முறையில் ரூ.20,000 கோடி, நன்கொடை மூலம் ரூ.660 கோடி, சுங்கவரி மூலம் ரூ.300 கோடி, இதர வருவாய் ரூ.66,000 கோடி கிடைத்துள்ளது. மகாகும்பமேளாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத ஜிடிபி வளர்ச்சிக்கு பங்களிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒரு நாள் வருவாய் மட்டும் ரூ.52 ஆயிரம் மகாகும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பம்: உபி முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mahakumbha Mela ,UP CM ,Lucknow ,UP ,CM ,Yogi ,UP Assembly ,Chief Minister ,Yogi Adityanath ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்