×

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே காருப்பள்ளி கூட்ரோடு பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் மோகன் ரோந்து சென்றார். அப்போது. அந்த பகுதியில் கேட்பாரின்றி நின்ற டிப்பர் லாரியில் சோதனை மேற்கொண்டார். அதில், ₹7,500 மதிப்பிலான 5 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, கெலமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில். போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Village Administrative Officer ,Mohan ,Karupalli Kootrodu ,Kelamangalam ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை