×

சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது

ஊத்தங்கரை, பிப்.25: ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார், ஒட்டம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்எஸ்ஐ சண்முகம் மற்றும் போலீசார், கெண்டிக்கானூர் பகுதியில் ரோந்து சென்ற போது, மது விற்று கொண்டு இருந்த பழனி(43) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Uthankarai Police SI ,Mohan ,Ottapatti ,Govindan ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை