×

ஆர்கே பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்து அய்யனேரி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக மாற்றியமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அய்யனேரி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள சுமார் 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்கே பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் appeared first on Dinakaran.

Tags : RK Pettai ,Ayyaneri ,R.K. Pettai ,Dinakaran ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...