மொடக்குறிச்சி, பிப்.16: அரச்சலூர் அடுத்த வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ராஜா (35), டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து பைக்கில் வடபழனிக்கு சென்று சர்க்கரை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்த போது அவ்வழியாக வந்த ஜெயராமபுரத்தை சேர்ந்த துளசிமணி (65), என்பவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜா படுகாயம் அடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராஜா உயிரிழந்தார். காயம் அடைந்த துளசிமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பலி appeared first on Dinakaran.
