×

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘‘ அணைகள் பாதுகாப்பு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியன், கேரள கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்று உள்ளனர்.

The post முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Mullaperiyar ,National Dam Safety Authority ,Anil Jain ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!