- பரிவேட்டை உற்சவம்
- குழிப்பந்தண்டலம்
- மாமல்லபுரத்தில்
- கானம் பொங்கல்
- தலசயன பெருமாள் கோயில்
- தேசம்
- பரிவேட்டை உற்சவம்
மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் கிராமத்தில், காணும் பொங்கலையொட்டி பாரிவேட்டை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தலசயன பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர தினமும் ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாரை வழிபட்டு செல்கின்றனர். ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி தலசயன பெருமாள் கோயில் சார்பில், பாரிவேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பாரிவேட்டை உற்சவத்துக்காக தலசயன பெருமாள் கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3.50 மணிக்கு பல்லக்கில் பெருமாள்-சக்கரத்தாழ்வார் குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டனர்.
அப்போது, மாமல்லபுரம் பூஞ்சேரி, அம்பாள் நகர், பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றாள், குச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பெருமாளை வழிபட்டனர். பின்னர், குழிப்பாந்தண்டலம் கிராமத்துக்கு மாலை 4 மணிக்கு வந்த தலசயன பெருமாள்-சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தலசயன பெருமாள் முயல் வேட்டையில் ஈடுபட்டு, ராஜ அலங்காரத்தில் குழிப்பாந்தண்டலத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவுக்கான, ஏற்பாடுகளை குழிப்பாந்தண்டலம் கிராமத்தார் சிறப்பாக செய்திருந்தனர். இதில், தலசயன பெருமாள் கோயில் மேலாளர் சந்தானம், பட்டாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post குழிப்பாந்தண்டலத்தில் பாரிவேட்டை உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.
