×

கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுத்தொகை

புழல்: சோழவரம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி சோழவரத்தில் நடந்தது. இதில் சோழவரம், கம்மார் பாளையம், ஆத்தூர், பொன்னேரி, சோழிபாளையம் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் முடிவில் பொன்னேரி அணி முதல் இடத்தையும், கம்மார் பாளையம் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. சோழவரம் ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கி, கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற முதல் அணிக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாவது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும், வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கினார். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை சோழவரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சோழவரம் ஜெகன் செய்திருந்தார்.

The post கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுத்தொகை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Cholavaram Union DMK Youth Wing ,Cholavaram ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Kammarpalayam ,Athur ,Ponneri ,Chozhipalayam ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...