×

காட்டுமன்னார்கோவில் அருகே கதண்டு கடித்து 20 பேர் காயம்

 

காட்டுமன்னார்கோவில், அக். 16: காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூர் கிராமத்தில் உள்ள பிரதான சாலையின் வழியாக சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காட்டுமன்னார்கோவில், எய்யலூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாய தொழிலாளர்கள் தங்கள் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் உள்ள ரைஸ் மில் அருகே வந்தபோது, அருகில் இருந்த பனை மரத்தில் இருந்த கதண்டுகள் பறந்து வந்து திடீரென பொதுமக்களை கடித்தன. இதனால் வலி தாங்க முடியாமல் பொதுமக்கள் அலறி ஓடினர். இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில், வேலப்பூண்டி ராமானுஜம் (70), கண்ணுச்சாமி(50), மலர் கொடி(48), பால குரு(47) ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிறு காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காட்டுமன்னார்கோவில் அருகே கதண்டு கடித்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kattumannarkovi ,Eyalur ,Melagadampur ,Dinakaran ,
× RELATED மளிகை கடை உரிமையாளரை தாக்கி பணத்தை திருடி சென்ற வாலிபர் கைது