×

மளிகை கடை உரிமையாளரை தாக்கி பணத்தை திருடி சென்ற வாலிபர் கைது

 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள டி‌.அருள்மொழிதேவன் மெயின் ரோட்டில் கடந்த 30 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருபவர் வீரமணி(55). இவருக்கு கடை அருகே வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் கடையில் இருந்து வீட்டிற்கு அவசர வேலை காரணமாக கடையை திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இதை கண்ட அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் மகன் பெயிண்டர் வேலை செய்து வரும் ஸ்ரீநாத் (24) என்பவர், கடையின் உள்ளே நுழைந்து பண பெட்டியில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தார்.

இதனை கண்ட கடை உரிமையாளர் வீரமணி, ஸ்ரீநாத்தை பிடிக்க முற்பட்டபோது கடையில் இருந்த சோடா பாட்டில் மற்றும் இரும்பு கம்பியை எடுத்து வீரமணி தலையில் பலமாக தாக்கி விட்டு பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் காயமடைந்த வீரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, ரெட்டியூர் பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீநாத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.6000 ரொக்கத்தை
பறிமுதல் செய்தனர்.

The post மளிகை கடை உரிமையாளரை தாக்கி பணத்தை திருடி சென்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Veeramani ,D. Arulmozhidevan ,
× RELATED காட்டுமன்னார்கோவில் அருகே கதண்டு கடித்து 20 பேர் காயம்