×

மண் அரிப்பால் விபத்து அபாயம்

 

திருவாடானை,அக்.14:திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாளம்மன் கோயில் இருப்பதால் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், மேல அரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைத்து பெயர்ந்துள்ள சாலையை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண் அரிப்பால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Tiruvettiyur ,Bhagambiriyalamman Temple ,
× RELATED அரசு பள்ளிக்கு சமையல் கூடம் கட்டித்தர வலியுறுத்தல்