×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம், அக்.15: ஆர்.எஸ்.மங்கலத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோய தொருவை சேர்ந்தவர் காஜா முகைதீன். இவரது மூன்றாவது மகன் பூட்டோ அலி(37). வெளிநாட்டில் இருந்து வந்தவர், கடந்த 2018ம் ஆண்டு பெங்களூரில் ரயிலில் இருந்து இறங்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இடது காலில் அடிப்பட்டு உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அவரது அறைக்குள் சென்றவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Kaja Mukaideen ,Mohammad Koya Toru ,Bhutto Ali ,Bangalore ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்