×

செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், அக். 15: காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பரசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வினோதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆஷா,லோகநாயகி, பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், மாநிலம் முழுவதும் காலியாக இருந்து வரும் நிரந்தர செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், மகப்பேறு விடுப்பு மற்றும் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

The post செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nurses Union ,Tiruvarur ,Tamilnadu MRP Nurses Development Association ,Anbarasi ,District Secretary ,Vinodha ,Nurses Association ,Dinakaran ,
× RELATED மாங்குடியில் துணை சுகாதார நிலையம் துவங்க வேண்டும்