×

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ல் தொடங்கி பிப். 28ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடந்தது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7,247 மையங்களில் 15.8 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

தேர்வுக்குப் பின் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்த நிலையில் கணக்கெடுப்பு நடக்கிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

The post குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,DNBSC ,DNPSC ,Dinakaran ,
× RELATED குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ...