×

மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்கு நேற்று கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில்,‘‘நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மேலும் புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு , தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குமிடங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதைத்தவிர அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை தவிர வேறு பணிகளுக்காக வருபவர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பின்னணிகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நடவடிக்கைகள் மருத்துவமனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,Union Health Secretary ,Apoorva Chandra ,DGPs ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...