×

மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சவால்

சென்னை : கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்றிய கல்வி கொள்கையுடன் ஒப்பிடும் போது மாநில கல்வி கொள்கையின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ரவி பேசியுள்ளார். இந்த நிலையில், மாநில அரசின் பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் மேலானது.

மாநில அரசின் கீழ் உள்ள பள்ளி மாணவர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத் திட்டம் அமைந்துள்ளது.போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். 6-12 வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்துதான் டிஎன்பிஎஸ்சி பயில்வோர் பயன்பெறுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் ஆளுநர் நேரில் சென்று பேச வேண்டும். ஒன்றிய அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே 6-12 வகுப்பு பாடபுத்தகங்களைத்தான் படிக்கின்றனர்.

கல்வி தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால் ஆளுநரை எங்கும் அழைத்துச் செல்ல தயார். மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அறிய ஆளுநர் ஒரு ஆணையத்தை அமைத்து ஆய்வு செய்யட்டும். குலக்கல்வி, மும்மொழிக் கொள்கை என அனைத்தையும் மறைமுகமாக செயல்படுத்தவே ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற மாட்டோம். முதன்மைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளளத் தெளிவாகக் கூறிவிட்டோம். தலைமைச் செயலாளர் மூலம் எழுதப்பட்ட கடிதத்தில் எங்களின் நிலையை விளக்கிவிட்டோம். SSA திட்டத்திற்கான நிதியை கேட்கிறோம்; பி.எம்.ஸ்ரீ.திட்டத்தை சேர்க்க வேண்டாம்,”இவ்வாறு பேசினார்.

The post மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சவால் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Education ,EU ,Anbil ,
× RELATED ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த...