×

சில்லி பாயின்ட்…

* இங்கிலாந்து அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 2வது டெஸ்டில், 483 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 60 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு ரன் எடுத்து திணறியது. கருணரத்னே 55, ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன் எடுக்க, நிசங்கா 14, மதுஷ்கா 13, பிரபாத் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 427 மற்றும் 251; இலங்கை 196 மற்றும் இலக்கு:483.

* டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனை நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) வசமாகி உள்ளது. அவர் 2024 சீசனில் இதுவரை 139 சிக்சர் விளாசி, சக வீரர் கிறிஸ் கேல் 2015ல் படைத்த சாதனையை (135 சிக்சர்) முறியடித்துள்ளார்.

* ஆஸ்திரேலியா அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என முன்னாள் கேப்டன் சினில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

* பாரிஸ் பாராலிம்பிக் ஆண்கள் குண்டு எறிதல் எப்40 பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் ரவி ரோங்காலி 5வது இடம் பிடித்து (10.63 மீட்டர்) நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : England ,London ,Lord ,Karunaratne ,Dinakaran ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை...