×

தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க கோரிக்கை

 

கூடலூர், ஜூலை 27: நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதிய தொகையை வழங்கக்கோரி தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் கூடலூர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் கூறியுள்ளதாவது: இப்பள்ளிகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 2002 நவம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

கூடலூர், பந்தலூர் வட்டாரங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2022ம் ஆண்டு முதல் 9 மாத ஊதியமும், நகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்கடந்த 2022ம் ஆண்டு முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படாமலும் நிலுவையில் உள்ளது.

இதனால் பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. எனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Tamil Nadu Teachers' Alliance ,Municipal Corporation ,Panchayat Union ,
× RELATED கஞ்சா பொட்டலத்தை தொடர்ந்து கடலூர்...