×

நகராட்சி முறைகேடுகளை கண்டித்து காங்கிரஸ் தொண்டர் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்

 

பாலக்காடு, ஜூலை 24: பாலக்காடு நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து பாலக்காடு பிளாக் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் தொண்டர் ஹரிதாஸ் மொட்டை அடித்து, தர்ப்பணம் செய்ய நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலக்காடு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவீட்டில் வியாபார வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் கட்டிடங்கள் அனைத்துமே பாதியில் நிற்கிறது.

மேலும், இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ஸ்டேடியம் பை-பாஸ் சாலையில் இரவு நேரகளில் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ நடமாட முடியாமல் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பல்வேறு காரணங்களை காட்டி வியாபார வணிக வளாக கட்டடங்களை கட்டி முடிக்காமல் இருப்பதை கண்டித்து பாலக்காடு பிளாக் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் காங்கிரஸ் தொண்டர் ஹரிதாஸ் மொட்டை அடித்து, தர்ப்பணம் செய்ய, நூதன கண்டனத்தை தெரிவித்தனர்.

இப்போராட்டத்திற்கு பிளாக் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரமுகர்கள் கிதர்முகமது சுதாகரன், முஸ்தப்பா, பவதாஸ், போபன் மாட்டு மந்தை, சாஜோ ஜோண், ரமேஷ், சேவியர், அனில்பாலன், மோகன்பாபு, நிகில், நகராட்சி உறுப்பினர்கள் கிருஷ்ணன், மினிபாபு, ஷஜித்குமார், பஷீர், மண்சூர், சைலஜா, அபு, ஆறுமுனக் பிரசோத் வல்சன், அஷரப், அகிலேஷ், நவாஸ், வைஷாக், ரியாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

The post நகராட்சி முறைகேடுகளை கண்டித்து காங்கிரஸ் தொண்டர் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Palakkad ,Palakkad Municipal Administration ,Haridas ,Palakkad Block Congress Committee ,
× RELATED போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்..!!