×

காங்கிரஸ் கட்சி சார்பில் 30 குடும்பத்தினருக்கு மளிகை காய்கறி

 

கூடலூர், ஜூலை 23: கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையின் தூக்கம் காரணமாக பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்ததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு யானை செத்த பள்ளி பகுதியில் 30 குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் கோசி பேபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.ஜே தாமஸ் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அம்சா, சபி, சிவா, முகமது ரபி, இபினு, உசைன், திருவேங்கடம் கலந்து கொண்டனர். கூடலூர் நகராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் சிவராஜ் நிவாரணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் 30 குடும்பத்தினருக்கு மளிகை காய்கறி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Cuddalore ,Southwest ,Dinakaran ,
× RELATED போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்..!!