×

பழக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கூடலூர்: கூடலூர் டவுன் மற்றும் சாலையோரங்களில் பழக்கடை வைத்து கஞ்சா விற்பனை நபர்களை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கேரளா கர்நாடக மாநில எல்லைப் பகுதியான கூடலூரில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாகுல் ஹமீது என்பவர் சாலையோர பழக்கடையில் பழங்களுக்குள் கஞ்சாவை மறைத்து விற்றது கண்டறியப்பட்டது. சாகுல்ஹமீது அளித்த தகவலின்பேரில் வியாபாரிகளுக்கு கஞ்சா விற்ற புத்தூர் வயலைச் சேர்ந்த பிஜு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நூதன முறையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

The post பழக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kudalur ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,Chakul ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்