×

4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறுகையில்,‘‘இந்தியாவின் சட்டப்படி 4 பேரையும் அந்நாடு விசாரிக்கும். அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்களா அல்லது இலங்கையில் இருக்கும்போது எந்த தீவிரவாத அமைப்புக்காவது உதவி செய்தார்களா என்பது குறித்து இலங்கை விசாரிக்கும்” என்றார்.

The post 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,IS ,Chennai ,Colombo ,Sardar Vallabhbhai Patel Airport ,Ahmedabad, Gujarat ,India ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...