×

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

திருச்சி, மே19: உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். திருச்சி மற்றும் அதன் புறநகர்ப் பகுகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட இடங்களில், “உலக உயர் ரத்த அழுத்த இனத்தை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம்களை திருச்சி அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக நடத்து வருகிறது” அப்போலோ கிளினிக், அப்போலோ மருந்தகங்கள், வணிக வளாகங்கள், வாக்கர்ஸ் பகுதிகள் மற்றும் பிற பொது இடங்கள் ஆகியவற்றில் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதற்கும், பொது மக்களுக்கு முக்கிய சுகாதார பரிசோதனைகள் மற்றும் கல்வி ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம், பெரும்பாலும் அமைதியான உயிர்கொள்ளி” என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படா விட்டால் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் அப்போலோ மருத்துவமனை திருச்சியின் விரிவான ஸ்கிரீனிங் திட்டம் ஆபத்தில் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களின் ரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிகழ்வின் வெற்றியால் உற்சாகமடைந்த அப்போலோ மருத்துவமனை பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக வழக்கமான சுகாதார முகாம்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. அருகில் உள்ள பரிசோதனை 9095333211 முகாம்கள் எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

The post ரத்த அழுத்த பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,World Hypertension Race ,Test ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...