×

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், மே 17: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல் மனைவி ராஜேஸ்வரி(41). கடந்த 9ம் தேதி இவரது மகன் தனது நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகிலுள்ள அருள்ராஜ் என்பவரது வீட்டில் பந்து விழுந்துள்ளது. இதனால் அருள்ராஜ், ராஜேஸ்வரியின் மகனை அசிங்கமாக திட்டியுள்ளார். இதனை ராஜேஸ்வரி சென்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்ராஜ் மற்றும் அவரது தாய் சாந்தி, மனைவி அனுசுயா ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜேஸ்வரியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜேஸ்வரி, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், அருள்ராஜ் உள்பட 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vrudhachalam ,Mayavel ,Rajeshwari ,Deevalur ,Karuveppilangurichi ,Arulraj ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி