×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜேக்கப் மெட்ரிக் பள்ளி மாணவன் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை

திருவள்ளூர், மே 12: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள ஜேக்கப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் கு.ஆதேஷ் 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் பி.ச.ஷாம் 487 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 94, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ர.லிங்கேஸ்வரன் 475 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 97, கணிதம் 98, அறிவியல் 89, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பாட வாரியாக கணிதப் பாடத்தில் 6 மாணவர்களும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா 1 மாணவனும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இந்த சாதனைக்கு, ஜேக்கப் கல்வி குழுமத்தின் தலைவர் ஜே.ஒய்.ஜேம்ஸ் ஜெயராஜ், முதல்வர் ஜாய்ஸ் மரியா, துணை முதல்வர் ஜோசப் ஜான்சன், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஊக்குவிப்பே மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைக்கவும், மேலும் 100 சதவிகிதம் தேர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜேக்கப் மெட்ரிக் பள்ளி மாணவன் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Jacob Matric School ,Thiruvallur ,Jacob Matriculation Higher Secondary School ,Manavalanagar ,K. Aadesh ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்