×

திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது

திருச்சி, மே 5: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அடுத்த ராமச்சந்திராநகர் செட்டியப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (29). இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் டூ வீலரை திருடிய எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy A. Putur ,Tiruchi ,Muthukrishnan ,Ramachandranagar Chetiyapatti Melatheru ,Edamalaipattiputhur, Tiruchi ,Edamalaipattiputhur ,Trichy A. Puthur ,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்:...