- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மக்களவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- திமுக
- இந்தியா கூட்டணி
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன்குமார் சந்தித்து பேசினார்.
அப்போது பொன்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்பின் போது தொகுதி வாரியான கள நிலவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் தர் வாண்டையார் சந்தித்தார். சந்திப்பின் போது அக்கழகத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் வைபவ் வாண்டையார் உடனிருந்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.கிருஷ்ணசாமி, வி.முத்துராஜா, இ.கருணாநிதி ஆகியோர் சந்தித்து பேசினர்.
The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.