×

வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது

கெங்கவல்லி, ஏப்.3: வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாவும், அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலப்பதாகவும் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வீரகனூர் இன்ஸ்பெக்டர் காந்திமதி, எஸ்ஐ கார்த்திக் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

அப்போது, வெள்ளையூர் ஏரிக்கரையில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்ததில், அவர் மது பதுக்கி, அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலந்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, வெள்ளையூர் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன்(31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

The post வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Weerganur ,Kengavalli ,Aathur ,DSP ,Satish Kumar ,Veeraganur ,Inspector ,Gandhimati ,SI Karthik ,Dinakaran ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு