×

கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால் ரத்தம் கக்கி சாவீர்கள்: மதுரை கூட்டத்தில் மந்திரவாதியாக மாறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: மதுரையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூட்டத்தின் இடையில் எவராவது எழுந்து சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். சரவணன் அறிமுக கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச தொடங்குவதற்கு முன் கூட்டத்தின் இடையில் எவரும் எழுந்துகொள்ள கூடாது என்றும் இல்லையென்றால் ரத்தம் கக்கி செத்துவிடுவீர்கள் என்றும் கூறினார்.

அந்தநேரி என்ற ஊரில் மந்திரவாதியை சந்தித்ததாகவும் கூட்டத்தில் தான் பேசும் போது எவராவது இடையில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாக வேண்டும் என கூறி அவரிடம் மந்திரம் வாங்கி வந்ததாகவும் கூறினார். அதனால் கூட்டத்தில் தான் பேசும் போது எவரும் பேசாமல் பேச்சை கவனிக்க வேண்டும் என்றும் பத்தியில் எழுந்து போக கூடாது என்று கூறிய அவர் மீறினால் வீடு போய் சேர்வதற்கு முன் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று நகைச்சுவையோடு கூறினார். நகைச்சுவைக்கே பேர்போன செல்லூர் ராஜு கூட்டத்தை தக்கவைக்க மந்திரவாதியாக மாறி ரத்தம் கக்கி சாவீர்கள் என்று கூறியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளங்களிலும் காமெடியாக பகிரப்பட்டு வருகிறது.

The post கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால் ரத்தம் கக்கி சாவீர்கள்: மதுரை கூட்டத்தில் மந்திரவாதியாக மாறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : minister ,Celluor Raju ,Madurai ,Adimuka ,Madura ,Madurai Lok Sabha ,Former ,Cellur Raju ,
× RELATED அண்ணாமலை செருப்புக்கு சமானம்: அதிமுக...