×

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

 

சேலம், மார்ச் 16: சேலம் வீராணம் பள்ளிப்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (28). இவரது மாமா சுப்பிரமணிக்கு அந்த பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. நேற்றுமுன்தினம் அந்த நிலத்தின் அருகே அளவீடு செய்ய வந்த நபர், சுப்பிரமணியின் நிலத்தையும் அளவீடு செய்தார். அப்போது அங்கிருந்த அன்பரசன் தட்டிக்கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நிலத்தை அளவீடு செய்த கதிர் உள்பட 2பேர் அன்பரசனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவர் வீராணம் போலீசில் அளித்த புகாரின் பேரில் கதிர் உள்பட 2பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

 

The post வாலிபர் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Anbarasan ,Salem Veeranam Pallipatti Aerikat ,Subramani ,Barrage attack on ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...