×

நடுவலூரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி, பிப்.9: கெங்கவல்லி தாலுகா, நடுவலூர் கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக தாசில்தார் வெங்கடேசனுக்கு, அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதன் பேரில், சர்வேயர் பிரகாசை, அளவீடு செய்ய தாசில்தார் உத்தரவிட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்தார்.

The post நடுவலூரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Madhulur ,Kengavalli ,Tahsildar ,Venkatesan ,Prakash ,Palanivel ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு