- சேலம்
- பால்ராஜ்
- வீராணம் பள்ளிப்பட்டி
- அம்பேத்கர் நகர்
- வடக்கு போக்குவரத்து பிரிவு
- சேலம் பெருநகர காவல்துறை
- அயோத்தியாப்பட்டினம் ராமர் கோவில்...
- தின மலர்
சேலம், பிப்.6:சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல்துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்பட்டணம் ராமர்கோயில் அருகேயுள்ள தனது அண்ணன் மகளின் வீட்டிற்கு பால்ராஜ் சென்றார். அங்கு வீட்டு முன் நடைப்பயிற்சியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள், பால்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
The post சிறப்பு எஸ்ஐ திடீர் சாவு appeared first on Dinakaran.