×

அனைத்து கார்டுகளுக்கும் இலவச வேட்டி-சேலை வழங்க வலியுறுத்தல்

 

கெங்கவல்லி, பிப்.5: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச வேட்டி- சேலை வழங்க அரசு உத்தரவிட்டது. கெங்கவல்லி தாலுகாவில், 84 ரேஷன் கடைகள் மூலம், 42,725 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோருக்கு வேட்டி-சேலை வழங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கெங்கவல்லி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச வேட்டி -சேலை முழுமையாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, ‘ஆயிரம் கார்டுகள் உள்ள கடைகளுக்கு 70 சதவீத பேருக்கு மட்டுமே வேட்டி- சேலைகள் வந்துள்ளன. இதனால், அனைவருக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக தினந்தோறும் மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றனர்.

The post அனைத்து கார்டுகளுக்கும் இலவச வேட்டி-சேலை வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Pongal festival ,Dinakaran ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு