×

பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை

சங்ககிரி, பிப்.4: சங்ககிரியில், பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சங்ககிரி பேரூராட்சி யாதவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி பிரேமா(37). இவர் கடந்த 15.02.2017ம் தேதி, வீட்டு வாசலில் பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 பேர், திடீரென பிரேமாவின் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, சங்கிலி பறித்த சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(33), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(32) ஆகியோர் மீது சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பாபு விசாரித்து, சங்கிலி பறித்த இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், திருட்டு நகை என்று தெரிந்தும், வாங்கி மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பிரேமாவிற்கு ₹2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Prema ,Yadav Street ,Sangakiri Municipality ,Dinakaran ,
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!