×

கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் சிறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 6 பேர் பலி 9 தீவிரவாதிகள் சுட்டு கொலை

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சிறைச்சாலை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 6 பேர் பலியாகினர். பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் மாக் நகரம் உள்ளது. இங்குள்ள பெரிய சிறையில் தீவிரவாதிகள், மரண தண்டனை கைதிகள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த இந்த சிறைச்சாலை மீது கடந்த திங்கள்கிழமை இரவு தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும் 15 ராக்கெட்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள், 4 அதிகாரிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மஜீத் குழு மாக் சிறைச்சாலை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

The post கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் சிறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 6 பேர் பலி 9 தீவிரவாதிகள் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Balochistan ,Karachi ,Pakistan ,Mak ,Balochistan, Quetta ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம்