×

மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் பலியானார்கள். மணிப்பூரின் பிஸ்னுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நரான்செய்னாவில் பாதுகாப்பு படையினரின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மலையின் உச்சியில் இருந்து முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினார்கள். இதில் ஒரு குண்டு சிஆர்பிஎப் 128வது பட்டாலியன் அவுட் போஸ்டின் மீது விழுந்தது.

தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சிஆர்பிஎப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் சர்கார் மற்றும் தலைமை காவலர் அரூப் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஆய்வாளர் ஜாதவ் தாஸ் மற்றும் காவலர் அப்தாப் தாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

The post மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : CRPF ,Manipur ,Imphal ,Naranseina ,Moirang ,Bisnupur ,CRPF camp ,Dinakaran ,
× RELATED ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து...