×

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஜனவரி.16ல் எல்லை தண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜன.16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர்.

மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 மீனவர்களை கைது செய்து மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

கடற்படை முகாமில் மீனவர்களுக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளித்து பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ஜனவரி 17ம் தேதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் புதுக்கோட்டை, நாகை ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sri ,court ,Sri Lanka ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Mannar court ,Sri Lankan court ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...